ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 125 பேருக்கு கொரோனா பரிசோதனை


ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 125 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 30 May 2021 12:57 AM IST (Updated: 30 May 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 125 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஊரடங்கை மீறி வெளியில் சுற்றி திரிந்த 100 பேரை பிடித்து, கொரோனா பரிசோதனை நடத்த அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை நடத்தினர்.

இதேபோன்று பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, அங்கு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 25 பேரை பிடித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story