கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு அறை மூலம் 15 ஆயிரம் பேருக்கு உதவி


கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு அறை மூலம் 15 ஆயிரம் பேருக்கு உதவி
x
தினத்தந்தி 6 Jun 2021 11:12 PM IST (Updated: 6 Jun 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு அறை மூலம் 15 ஆயிரத்து 27 பேருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு அறை மூலம் 15 ஆயிரத்து 27 பேருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை

சிவகங்கை மாவட்டத்தில் (கோவிட்-19) கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை வழங்கவும், கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகின்றது. இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், போக்குவரத்துத்துறை, பேரூராட்சித்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள ஏதுவாக இலவச அழைப்பாக 1800 4259 456, 93454 67903, 04575-246233 மற்றும் 1077 என்ற தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் பேருக்கு...

இந்த கட்டுப்பாட்டு அறையில் கொரோனா பெருந்தொற்று தொடர்பான 358 அழைப்புகளும், இதர உதவி கோரி 134 அழைப்புகளும், தகவல்கள் கோரி 267 அழைப்புகளும் வரப்பெற்றுள்ளன. மேலும், இந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து தன்னார்வலர்களால் 11,324 அழைப்புகளும், உளவியல் ஆலோசனைகளுக்காக 3,703 அழைப்புகளும் பேசப்பட்டுள்ளன.
இதில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய படுக்கை வசதி கோரி 97 அழைப்புகளும், படுக்கை வசதி மட்டும் கோரி 64 அழைப்புகளும், வீட்டுத்தனிமையின் போது ஆலோசனை கோரி 42 அழைப்புகளும் வரப்பெற்று உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் ஏற்கனவே கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு மருத்துவர் ஆலோசனையுடன் வீட்டுத்தனிமையில் இருந்த 114 நபர்களை கண்டறிந்து மீள மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
மேலும் இந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கிய நாள் முதல் 759 அழைப்புகளும், இந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து 15 ஆயிரத்து 27 பேரிடம் பேசப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் கொேரானாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை மற்றும் உளவியல் ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Next Story