பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
சுரண்டை அருகே குலையநேரி கிராமத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
சுரண்டை, ஜூன்:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குலையநேரி கிராமத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நற்பணி மன்ற மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன் ஆலோசனையின்படி நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அய்யாசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, சுகாதார மேற்பார்வையாளர் புன்னைவனம், சுகாதார ஆய்வாளர் ஜான் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
நற்பணி மன்ற நிர்வாகிகள் தங்க ரத்தினம், திருநாவுக்கரசு, சிவன் பாண்டி, செல்வம், தர்மர், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் கண்ணன், பஞ்சாயத்து செயலாளர் கிருஷ்ணசாமி, சுப்பையாபுரம் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story