ரூ.10 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய அக்காள்-தம்பி


ரூ.10 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய அக்காள்-தம்பி
x
தினத்தந்தி 8 Jun 2021 8:38 PM IST (Updated: 8 Jun 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் ஆர்.டி.ஓ.விடம் ரூ.10 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை அக்காள்-தம்பி வழங்கினர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். அவருடைய மகள் டேனிட்டா. இவர், கொடைக்கானலில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அவரது தம்பி ரோகித். இவர், 6-ம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் 2 பேரும், தங்களது பெற்றோர் கொடுக்கிற பணத்தை சேமித்து வந்தனர்.

இந்தநிலையில் அந்த பணத்தை, முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனர். அதன்படி தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை, கொடைக்கானல் ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் வழங்கினர்.

 நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ., அக்காள்-தம்பியை பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார். இதேபோல் நிவாரண உதவி வழங்கிய அவர்களை பலரும் பாராட்டினர்.
-------

Next Story