பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2021 5:09 AM GMT (Updated: 12 Jun 2021 5:09 AM GMT)

வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பூர், 

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். வேளச்சேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரும், வேளச்சேரி எம்.எல்.ஏ.வுமான அசன் மவுலானா, தென் சென்னை இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி ஆலந்தூர் மண்டலம் சார்பில் ஆதம்பாக்கம் சுரேந்தர் நகரில் மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையிலும், திருவொற்றியூர் காங்கிரஸ் கட்சி 2-வது சர்க்கிள் சார்பில் திருவொற்றியூர் அஜாக்ஸ் பெட்ரோல் நிலையம் அருகே தலைவர் கே.எஸ்.அரவிந்த் ஆறுமுகம் தலைமையிலும், மணலி 6-வது சர்க்கிள் சார்பில் மணலி காமராஜர் சாலையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தீர்த்தி தலைமையிலும், தென் சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மன்சூர் சுபான் தலைமையில் அம்பத்தூர் வாவின் பகுதியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story