திருவண்ணாமலை; மேலும் 338 பேருக்கு கொரோனா; தொற்றுக்கு 5 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 5 பேர் தொற்றுக்கு உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் மேலும் 338 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
நேற்று வரை 45,941 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 41,526 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர்.
தற்போது 3,895 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 520 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
Related Tags :
Next Story