ஓசூரில் முககவசம் அணியாமல் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட போதை வாலிபர்


ஓசூரில் முககவசம் அணியாமல் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட போதை வாலிபர்
x
தினத்தந்தி 13 Jun 2021 2:11 AM IST (Updated: 13 Jun 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் போலீசாருடன் முககவசம் அணியாமல் தகராறில் ஈடுபட்ட போதை வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூர்:
போதை வாலிபர்
ஓசூரில், பாகலூர் ரோடு சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 
விசாரணையில் அவர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 31) என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் சரியாக முககவசம் அணியவில்லை. இதையடுத்து போலீசார் அவரை சரியாக முககவசம் அணியுமாறு கூறினர். ஆனால் சுரேஷ் முககவசம் அணிய மறுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பரபரப்பு
மேலும் போலீசாரை தரக்குறைவாக பேசி தகராறில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் முககவசத்தை சரியாக அணியாத காரணத்திற்காக அவருக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வாலிபர் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story