சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 30 பேர் பலி புதிதாக 894 பேருக்கு தொற்று உறுதி


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 30 பேர் பலி புதிதாக 894 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 13 Jun 2021 2:54 AM IST (Updated: 13 Jun 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 30 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 894 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 30 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 894 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
894 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 916 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 894 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 162 பேர், சங்ககிரியில் 66 பேர், ஓமலூரில் 54 பேர், கெங்கவல்லியில் 41 பேர், மேச்சேரியில் 35 பேர், ஆத்தூரில் 31 பேர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 29 பேர், தாரமங்கலத்தில் 28 பேர், சேலம் ஒன்றியம், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 27 பேர், நங்கவள்ளியில் 26 பேர், வீரபாண்டியில் 25 பேர், மேட்டூரில் 19 பேர், எடப்பாடியில் 18 பேர், கொளத்தூர், கொங்கணாபுரம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 14 பேர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் தலா 11 பேர், நரசிங்கபுரத்தில் 7 பேர், ஏற்காட்டில் 3 பேர், பனமரத்துப்பட்டியில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
1,373 பேர் டிஸ்சார்ஜ்
மேலும் சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 38 பேர், ஈரோடு, தர்மபுரியில் இருந்து வந்த தலா 30 பேர், சென்னை, கள்ளக்குறிச்சியில் இருந்த வந்த தலா 25 பேர், காஞ்சீபுரத்தில் இருந்து வந்த 18 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 15 பேர், கரூரில் இருந்து வந்த 12 பேர், கடலூரில் இருந்து வந்த 9 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,373 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். தொடர்ந்து 9 ஆயிரத்து 296 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
30 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்புகள் அதிகளவு ஏற்பட்டு வருகின்றன. சேலத்தை சேர்ந்த 9 பெண்கள் உள்பட 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,244-ஆக அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story