களக்காடு அருகே குளத்தில் மூழ்கி மாணவர் பலி

களக்காடு அருகே குளத்தில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பொத்தை சுத்தியை சேர்ந்தவர் கார்த்தீசன். இவரது மகன் சுடர் பரத்ராஜ் (வயது 15). 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது நண்பர்களுடன் சுடர் பரத்ராஜ் ஊருக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.
இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டனர். பின்னர் களக்காடு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story