பட்டாசு பதுக்கி வைத்திருந்தவர் கைது

x
தினத்தந்தி 23 Jun 2021 1:25 AM IST (Updated: 23 Jun 2021 1:25 AM IST)


தாயில்பட்டி அருகே பட்டாசு பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அனுமதியின்றி பட்டாசு மற்றும் கருந்திரி தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார். இதையடுத்து ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் அழகுஜோதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் அலெக்ஸ் (வயது 37) என்பவரின் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து விற்பனைக்காக 8 அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், அலெக்சை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire