விளாத்திகுளத்தில் இளம்பெண் தற்கொலை


விளாத்திகுளத்தில் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 24 Jun 2021 9:40 PM IST (Updated: 24 Jun 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விளாத்திகுளம்:
 விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி மகேஷ் (வயது 29). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. குழந்தை பேறு இல்லாததால் மகேஷ் பல்வேறு இடங்களில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். 
ஆனாலும் குழந்தை பாக்கியம் கிடைக்காத நிலையில் விரக்தியில் இருந்துள்ளார். சம்பவத்தன்று விஷத்தை குடித்து விட்டு அவர் வீட்டிற்குள் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து பதறிப்போன அவரது கணவர் முத்துகுமார் உடனடியாக அவரை மீட்டு விளாத்திகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிக்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்lசை பலனின்றி நேற்று மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழககுப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story