மாங்காய் திருடிய கும்பலை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாங்காய் திருடிய கும்பலை தட்டிக்கேட்ட முதியவரை அடித்து கொன்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாங்காய் திருடிய கும்பலை தட்டிக்கேட்ட முதியவரை அடித்து கொன்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாக்குதல்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 70). இவர் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது சிலர் தோட்டத்தில் உள்ள மாங்காய்களை பறித்து கொண்டிருந்தனர்.
உடனே ராமர், மாங்காய்களை பறிக்க கூடாது என தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ராமரை கம்பாலும் மற்றும் கைகளாலும் சரமாரியாக தாக்கினர்.
அப்போது ராமர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சின்னப்பராஜ் (49) அங்கு வந்தார். அவரையும் அவர்கள் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதுதொடர்பாக சின்னப்பராஜ் மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் காயமடைந்த ராமர், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் சின்னப்பராஜ் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தபாலமுருகன் (21), சரவணன் (23),அனீஸ் பிரபு (22) உள்பட 6 பேர் சேர்ந்து ராமரை தாக்கியது தெரியவந்தது.
3 பேர் கைது
இதற்கிடையை மதுரை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து மம்சாபுரம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பாலமுருகன், சரவணன், அனீஷ் பிரபு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story