சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 295 பேர் பாதிப்பு 9 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 295 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
சேலம்,
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்பட்டுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2 ½ மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 300-க்கும் குறைவாக வந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 302 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 295 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 54 பேரும், சேலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 172 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 45 பேரும், நகராட்சி பகுதிகளில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 20 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
466 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 864 ஆக அதிகரித்துள்ளன. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த 466 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 1,841 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சேலத்தை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,472 ஆக அதிகரித்துள்ளன.
Related Tags :
Next Story