சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 626 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 56 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.மேலும் கொரோனா தொற்று காரணமாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 35 வயது உள்ள பெண் ஒருவர் சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.