காவேரிப்பாக்கம் அருகே இரும்பு பைப்பால் தாக்கப்பட்ட பெண் சாவு


காவேரிப்பாக்கம் அருகே இரும்பு பைப்பால் தாக்கப்பட்ட பெண் சாவு
x
தினத்தந்தி 4 July 2021 4:19 PM GMT (Updated: 4 July 2021 4:19 PM GMT)

காவேரிப்பாக்கம் அருகை இரும்பு பைப்பால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருடைய கணவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவேரிபாக்கம்

இரும்பு பைப்பால் தாக்கினார்

காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி நாவலர் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 32) கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தர்மலிங்கம், மனைவி மீனாவை இரும்பு பைப்பால் தாக்கி உள்ளார். இதில் மீனா மயங்கி விழுந்தார். உடனடியாக மீனாவை மீட்டு அக்கம் பக்கத்தினர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 
சிகிச்சை பலனின்றி சாவு

இந்த சம்பவம் குறித்து காவேரிபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப் பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீனா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் காவேரிப்பாக்கம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Next Story