அதிக மதுபாட்டில்கள் வாங்கி வந்தவர் கைது


அதிக மதுபாட்டில்கள் வாங்கி வந்தவர் கைது
x
தினத்தந்தி 6 July 2021 2:54 AM IST (Updated: 6 July 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

அதிக மதுபாட்டில்கள் வாங்கி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த கோடங்குடியை சேர்ந்த சுப்ரமணி மகன் தங்கபால்(வயது 29). இவர் தா.பழூர் டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில் வாங்கி வந்தபோது, போலீசார் பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் 35 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மது பாட்டில்கள் வாங்கி வந்ததால் தங்கபால் மீது தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, மதுபாட்டில்களை விற்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story