தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது


தர்மபுரி மாவட்டத்தில்  கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 6 July 2021 9:54 PM IST (Updated: 6 July 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது. நேற்று கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 114 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 833 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 213 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

Next Story