மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தை போக்சோவில் கைது


மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தை போக்சோவில் கைது
x
தினத்தந்தி 11 July 2021 4:52 AM GMT (Updated: 11 July 2021 4:52 AM GMT)

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரியில் வசித்து வரும் 35 வயதுடைய உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட வாலிபர் ஒருவர், தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். அப்போது வேலியே பயிரை மேய்ந்தது போல் அவர் தனது 12 வயதுடைய மகளுக்கு கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது தாயிடம் கூறி அழுது புலம்பியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சிறுமியின் தாயார் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபரை கைது செய்து அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

Next Story