திருவள்ளூர் அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 July 2021 4:43 PM GMT (Updated: 14 July 2021 4:43 PM GMT)

திருவள்ளூர் அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் குச்சிக்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 48). இவரது மூத்த மகன் ரஞ்சித், இளைய மகன் அஜித். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித், அஜித் இடையே தகராறு ஏற்பட்டது. இதை அறிந்த மல்லிகா தனது மகன்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் தனது தாயை தகாத வார்த்தையால் பேசி வீட்டில் இருந்த தீப கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு 12 தையல் போடப்பட்டது. இது குறித்து மல்லிகா வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story