வாலிபர் கைது

பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி,
சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி நகரை சேர்ந்தவர் சித்ரா (வயசு 27). திருத்தங்கலில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தும் கார்த்திக், மணிகண்டன் ஆகியோரிடம் வட்டிக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள், உனது அண்ணன் வாங்கிய கடன் இன்னும் சரியாக கட்டவில்லை என சத்தம் போட்டுள்ளனர். இதனால் மனம் உடைந்த சித்ரா வட்டிக்குபணம் வேண்டாம் என்று கூறி பைனான்ஸ் நிறுவ னத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது ஆத்திர மடைந்த கார்த்திக், மணிகண்டன் ஆகியோர் சித்ராவை அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப ்படுகிறது. இதுகுறித்து சித்ரா திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மணிகண்டனை போலீசார் கைது செய்து கார்த்திக்கை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story