லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி


லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி
x
தினத்தந்தி 20 July 2021 1:44 AM IST (Updated: 20 July 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் லாரி மோதி ஆட்டோ டிரைவர் இறந்தார்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகையா (வயது 65). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மதியம் சங்கரன்கோவில் கச்சேரி ரோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகில் சாலையோர வளைவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக சண்முகையா மீது மோதியது. இதில் லாரியின் டயர் சண்முகையா மீது ஏறி இறங்கியதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும், சங்கரன்கோவில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சண்முகையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story