மகாராஜா கடை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


மகாராஜா கடை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

மகாராஜா கடை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை அருகே உள்ள பி.சி.புதூர் ஜெய்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 59). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா (37). முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி 2 முறை முருகன் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளார். 
இந்த நிலையில் சம்பவத்தன்று மகாராஜா கடை அருகே நாரல்லபள்ளி பகுதியில் மது குடித்த அவர் பின்னர் குடிபோதையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் இறந்தார். இதுகுறித்து மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story