சோளிங்கர் அருகேகர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது


சோளிங்கர் அருகேகர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 25 July 2021 10:22 PM IST (Updated: 25 July 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது

சோளிங்கர்

சோளிங்கர் அடுத்த வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, ராணுவ வீரர். இவரது மனைவி ஜானகி (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான ஜானகிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். வலி அதிகமானதால் ஆம்புலன்சை நிறுத்தி மருத்துவ உதவியாளர் கிரிஜா, ஜானகிக்கு பிரசவம் பார்த்தார்.

இதனால் ஜானகிக்கு ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 




Next Story