ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழை

ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழை
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சந்தைக்கோடியூர் ஏரியிக்கு மழைநீர் செல்லும் வழியில் மற்றும் மலையடிவாரத்தில் இருந்து வரும் மழை நீர் வரும் வழிகளில் பல்வேறு தரப்பினரும் ஆக்கிரமிப்பு செய்ததால் சந்தைக்கோடியூர் ஏரிக்கு நீர் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் சந்தைக்கோடியூர் ஏரிக்கு மழை நீர் வரும் நீர்வரத்து கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story