விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்த்த விவசாயி கைது


விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்த்த விவசாயி கைது
x
தினத்தந்தி 28 July 2021 10:19 PM IST (Updated: 28 July 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்த்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே உள்ள சித்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சே கவுண்டர். இவருடைய மகன் ராமச்சந்திரன் (வயது 40). விவசாயி. இவர் தனது நிலத்தில் பயிர்களுக்கிடையே கஞ்சா செடி வளர்த்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அஞ்செட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் (பொறுப்பு) மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது யாருக்கும் தெரியாமல் இருக்க விவசாய நிலத்தில் பயிர்களுக்கிடையே கஞ்சா செடியை பயிரிட்டு அதனை ரகசியமாக வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து, விவசாய தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட ராமச்சந்திரனை கைது செய்தனர். தொடந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story