குடவாசல் அருகே கடன் தொல்லையால் ஊராட்சி தலைவர் தற்கொலை

குடவாசல் அருகே கடன் தொல்லையால் ஊராட்சி தலைவர் தற்கொலை செய்து கொண்டார்.
குடவாசல்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள நெடுஞ்சேரி மேலத் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது53). நெடுஞ்சேரி ஊராட்சி தலைவரான இவர் கடந்த சில ஆண்டுகளாக தனியார் வங்கிகளில் கடன் பெற்று இருந்ததாகவும், கூறப்படுகிறது. இந்தநிலையில் இவர் ஒரு தனியார் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தக்கோரி சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்தினர் முருகானந்தத்துக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் கடனை செலுத்த முடியாத நிலையில் முருகானந்தம் சம்பவத்தன்று மாலை விஷம் குடித்து விட்டு சேங்காலிபுரத்தில் உள்ள வயல்பகுதியில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீ்ட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் உயிரிழந்தார்.
இது குறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story