ரிஷிவந்தியம் அருகே நிலத்தகராறில் வாலிபர் அடித்துக் கொலை


ரிஷிவந்தியம் அருகே  நிலத்தகராறில் வாலிபர் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 31 July 2021 10:35 PM IST (Updated: 31 July 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே நிலத்தகராறில் வாலிபரை அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்

ரிஷிவந்தியம்

விவசாயி

ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(வயது 70). விவசாயியான இவருக்கு தாமோதரன் மற்றும் அலெக்ஸ் பாண்டியன்(35) என 2 மகன்கள் இருந்தனர். 
இவர்களில் தாமோதரன் விபத்தில் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன், ஒரு மகள் ஆகியோரும், அலெக்ஸ் பாண்டியனுக்கு செல்வி என்ற மனைவியும் ஒரு மகன், 2 மகள் ஆகியோர் உள்ளனர்.

அடித்துக்கொலை

இந்தநிலையில் அண்ணாமலை பயிர்சாகுபடி செய்து வந்த 3 ஏக்கர் நிலத்தில் பங்கு கேட்டு அலெக்ஸ் பாண்டியன் தினமும் மது குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர் மீது அண்ணாமலை கோபத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் அலெக்ஸ் பாண்டியன் தூங்கிக்கொண்டிருந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அண்ணாமலை, அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து அலெக்ஸ் பாண்டியனின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அண்ணாமலை அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 

கைது

இது பற்றி தகவல் அறிந்ததும் ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி அலெக்ஸ் பாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். நிலத்தில் பங்கு கேட்டு தகராறு செய்த மகனை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் ரிஷிவந்தியம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story