மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 2 Aug 2021 10:26 AM IST (Updated: 2 Aug 2021 10:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 19). இவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான விக்னேஷ் (23) என்பவருடன் ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள நீர்விழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையோரம் உள்ள சிமெண்டு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷ் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

Next Story