சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை விரிவுப்படுத்திட மானியம் வழங்கும் திட்டத்தில் புதிய மீன் வளர்ப்பு குளம் அமைத்திட 50 சதவீத மானியம் மற்றும் மீன்வளர்ப்பு செய்திட 40 சதவீதம் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் சிவகங்கை பெருமாள் கோவில் தெருவில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று வருகிற 23-ந்தேதி பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.