மொபட்டில் மணல் மூட்டைகள் கடத்தியவர் கைது


மொபட்டில் மணல் மூட்டைகள் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2021 1:30 AM IST (Updated: 12 Aug 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

மொபட்டில் மணல் மூட்டைகள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கொள்ளிடக்கரை பகுதிகளில் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கிராம நிர்வாக அதிகாரி சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தா.பழூர் அடிக்காமலை பிரிவு சாலையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது தெற்கு தாதம்பேட்டை கிராமத்தை சேர்ந்த மருதமுத்து(வயது 36) தனது மொபட்டில் 3 மூட்டைகளில் மணல் ஏற்றிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரை நிறுத்தி விசாரித்தபோது, மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தா.பழூர் போலீசில் சிவகுமார் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து மருதமுத்துவை கைது செய்தார்.

Next Story