ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் ஆண் பிணம் - யார் அவர்? போலீசார் விசாரணை


ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் ஆண் பிணம் - யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Aug 2021 8:12 AM IST (Updated: 12 Aug 2021 8:17 AM IST)
t-max-icont-min-icon

ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்கப்பட்டது. மேலும் அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்,

ஜேடர்பாளையம் அருகே உள்ள வடுகபாளையம் காவிரி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று மிதப்பதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story