கர்நாடகத்தில் புதிதாக 1431 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,431 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 767 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,431 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 29 ஆயிரத்து 464 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் 21 பேர் உயிரிழந்தனர்.
இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,611 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 69 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது. 22 ஆயிரத்து 497 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
பெங்களூரு நகரில் 305 பேர், தட்சிண கன்னடாவில் 311 பேர், மைசூருவில் 83 பேர், உடுப்பியில் 177 பேர், சிக்கமகளூருவில் 45 பேர், துமகூருவில் 51 பேர், சிவமொக்காவில் 41 பேர், உத்தரகன்னடாவில் 64 பேர், குடகில் 82 பேர், ஹாசனில் 87 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகர், ஹாசனில் தலா 3 பேரும், தட்சிண கன்னடாவில் 4 பேரும், சித்ரதுர்கா, கோலார், உடுப்பியில் தலா 2 பேரும் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story