விபத்தில் பெண் பலி

விபத்தில் பெண் பலியானார்
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மெய்க்காவல்புத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 47). நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வீரசோழபுரம் கடைவீதிக்கு செல்ல அண்ணாதுரை அவரது மனைவி லட்சுமி (45) மற்றும் மகன் அருண்குமார் (22) ஆகியோர் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமி பலியானார். அருண்குமார் பலத்த காயம் அடைந்தார். அருண்குமார் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அண்ணாதுரை லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அண்ணாதுரை கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது அதனை ஓட்டிச் சென்றவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மெய்க்காவல்புத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 47). நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வீரசோழபுரம் கடைவீதிக்கு செல்ல அண்ணாதுரை அவரது மனைவி லட்சுமி (45) மற்றும் மகன் அருண்குமார் (22) ஆகியோர் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமி பலியானார். அருண்குமார் பலத்த காயம் அடைந்தார். அருண்குமார் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அண்ணாதுரை லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அண்ணாதுரை கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது அதனை ஓட்டிச் சென்றவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story