பரமத்திவேலூரில் மோட்டார்சைக்கிள்- மொபட் மோதல்; தொழிலாளி பலி


பரமத்திவேலூரில் மோட்டார்சைக்கிள்- மொபட் மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 27 Aug 2021 5:01 PM GMT (Updated: 27 Aug 2021 5:02 PM GMT)

பரமத்திவேலூரில் மோட்டார்சைக்கிள்- மொபட் மோதல்; தொழிலாளி பலி.

பரமத்திவேலூர்,

கரூர் அருகே உள்ள ராயனூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர்‌ கடந்த 22-ந் தேதி கரூரில் இருந்து பரமத்தியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ‌‌‌வந்தார். பின்னர்‌ மீண்டும் கரூர் செல்ல தனது மொபட்டில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் சென்றார்.

அப்போது பரமத்திவேலூர் செல்லும்‌ பிரிவு சாலையில் வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முத்துக்குமார்‌ சென்ற மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த முத்துக்குமாரை அங்கிருந்தவர்கள்‌ மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ‌‌‌‌‌‌‌‌‌முத்துக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story