கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்தனர்


கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 1 Sept 2021 12:25 AM IST (Updated: 1 Sept 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்தனர்.

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45 ஆயிரத்து 141 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 67 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.


Next Story