மதுராந்தகம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு

மதுராந்தகம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கியது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் புத்தூரை சேர்ந்தவர் உசேன். இவரது மகன் மீரான் (வயது 25). இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட இவர் தனது திருமணத்திற்காக வீட்டிலுள்ள மின்விளக்குகளை சரி செய்தார்.அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
சாவு
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அவரது தந்தை உசேன் மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story