நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி; சாவு எண்ணிக்கை 472 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் சாவு எண்ணிக்கை 472 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்:
2 பேர் சாவு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 470 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவர் மற்றும் 36 வயது ஆண் என 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியான்வர்களின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்து உள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 48 ஆயிரத்து 895 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று புதிதாக மேலும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 942 ஆக அதிகரித்து உள்ளது.
509 பேருக்கு சிகிச்சை
நேற்று 67 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 961 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 3-வது அலையை தடுக்கும் வகையில், பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story