புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 14 Sep 2021 6:22 PM GMT (Updated: 14 Sep 2021 6:22 PM GMT)

புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொற்று மிகவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 19 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story