திருக்கோவிலூர் அருகே மொபட் மோதி வாலிபர் பலி


திருக்கோவிலூர் அருகே  மொபட் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 15 Sept 2021 11:13 PM IST (Updated: 15 Sept 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மொபட் மோதி வாலிபர் பலி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி மகன் சிவா(வயது 19). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சித்தேரி கிராமத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மொபட் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிவாவை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story