சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏமன் நாட்டுக்கு செல்ல முயன்றவர் கைது


சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏமன் நாட்டுக்கு செல்ல முயன்றவர் கைது
x
தினத்தந்தி 16 Sep 2021 9:18 PM GMT (Updated: 16 Sep 2021 9:18 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு செல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சாா்ஜா செல்லும் விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அப்போது வேலூரைச் சோ்ந்த சமியுல்லா (வயது 28) என்பவரது பாஸ்போா்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அதில் அவா், 2019-ம் ஆண்டில் சாா்ஜாவுக்கு வேலைக்கு செல்வதாக விசா வாங்கி விட்டு சாா்ஜா வழியாக ஏமன் நாட்டுக்கு சென்று 8 மாதங்கள் தங்கி இருந்தது தெரியவந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இந்திய அரசு லிபியா, ஏமன் ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதித்து இருந்தது. தடையை மீறி செல்பவா்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இதையடுத்து சமியுல்லாவின் விமான பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் மேலும் விசாரணை நடத்தினா். அப்போது அவர், தான் அலுவலக பணியாக சாா்ஜாவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சென்றதாக கூறினாா். ஆனால் அவரது விளக்கத்தை அதிகாரிகள் ஏற்று கொள்ளவில்லை.

மேலும் அவர், தற்போதும் சாா்ஜா சென்று, அங்கிருந்து மீண்டும் ஏமன் செல்ல இருப்பதையும் கண்டுபிடித்தனா். இதையடுத்து சமியுல்லாவை கைது செய்து சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனா்.

இதுபற்றி விமான நிலைய போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Next Story