29 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது


29 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
x
தினத்தந்தி 19 Sep 2021 8:33 PM GMT (Updated: 19 Sep 2021 9:01 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட முகாமில் 29 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் மாபெரும் 2&ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் திருவாரூர் அருகே பின்னவாசல் பகுதியில் நடைபெற்ற முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அவர் கூறியதாவது-

கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்று தான் சிறந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசியாக 5 லட்சத்து 17 ஆயிரத்து 950 பேருக்கும், 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசியாக 1 லட்சத்து 11 ஆயிரத்து 179 பேருக்கும் ஆக மொத்தம் 6 லட்சத்து 29 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் இந்த முகாம் மூலம் 29 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை இலக்காக நிர்ணயித்து 319 இடங்களில் மாபெரும் இரண்டாம் கட்ட சிறப்பு  தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் பாலசந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story