மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று ஒருவர் பலி
மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து மாவட்டத்தில் 38 பேர் குணமடைந்தனர். இதனால் ‘டிஸ்சார்ஜ்‘ ஆனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 970 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மாவட்டத்தில் தற்போது 207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகினார். இதனால் இறப்பு எண்ணிக்கை 403 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story