பணம் பறித்த வாலிபர் கைது

தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி கிழக்கு நாரணாபுரம் பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 31). தொழிலதிபரான இவர் சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவா என்கிற சிட்டிசன் (20) என்பவர் யோகேஸ்வரனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் தருமாறு கூறியுள்ளார். இதற்கு யோகேஸ்வரன் மறுத்த போது அவரது சட்டை பையில் இருந்த ரூ.600-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து யோகேஸ்வரன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவா என்கிற சிட்டிசனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story