சோளிங்கர் லட்சுமிநரசிம்மர் கோவிலில் நவராத்திரி 2-ம் நாள் உற்சவம்


சோளிங்கர் லட்சுமிநரசிம்மர் கோவிலில் நவராத்திரி 2-ம் நாள் உற்சவம்
x
தினத்தந்தி 7 Oct 2021 11:39 PM IST (Updated: 7 Oct 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

நவராத்திரி 2-ம் நாள் உற்சவம்

சோளிங்கர்

சோளிங்கர் லட்சுமிநரசிம்மர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாள் நவராத்திரி உற்சவம் நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம்நேற்று முன்தினம் தொடங்கி 14-ந்தேதி நிறைவடைகிறது. உற்சவத்தின் 2-வது நாளான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி, பக்தோசித பெருமாள் மற்றும் அமிர்தவல்லி தாயாருக்கு ிறப்புப்பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து மாலை ஸ்ரீேதவி, பூேதவி, பக்தோசித பெருமாள் ஆகியோர் ஒரு தங்கக்கேடத்திலும், அமிர்தவல்லி தாயார் மற்றொரு தங்கக்கேடயத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் இசைக்க கோவில் வளாகத்தில் 3 முறை உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 
உற்சவ ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையர் ஜெயா செய்திருந்தார்.

Next Story