பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 9 Oct 2021 11:41 PM IST (Updated: 9 Oct 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி, அக்.10-
புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை யொட்டி தர்மபுரி பகுதியில்  அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த வழிபாட்டில் பக்தர்கள் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வர். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் நடைபெறும் வழக்கமான அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் ஆகம விதிகள்படி நடைபெறும் என்றும், கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.அதன்படி தர்மபுரி பகுதியில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி 4-வது சனிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
பரவாசுதேவ சாமி
தர்மபுரி கோட்டை வர மகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், உபசார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிட வந்து இருந்தனர். ஆனால் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பினர்.
இதேபோல் தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், குமாரசாமிப்பேட்டை பூதேவி, ஸ்ரீதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மணியம்பாடி
இதேபோன்று தர்மபுரி ஒட்டப்பட்டி வள்ளுவர்நகர் லட்சுமி நரசிம்ம வெங்கடேச பெருமாள் கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், பழைய தர்மபுரி வரதகுப்பம் வெங்கட ரமண சாமி கோவில், சோகத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவில், செட்டிகரை பெருமாள் கோவில், மூக்கனூர் அக்கமனஅள்ளி ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
இந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்பதால் அவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமியை தரிசனம் செய்து சென்றனர். பெரும்பாலான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே உள்ள கோபுரம் மற்றும் கொடி மரத்தை வழிபட்டு சென்றனர்.
காரிமங்கலம்
காரிமங்கலம் அக்ரஹாரம் நாராயண சாமி கோவிலில் அதிகாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காரிமங்கலம் சஞ்சீவிராயன் மலை சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தது. மதியம் அடிவாரத்தில் பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவில், மோதூர் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி கோவில், பிக்கனஅள்ளி சென்ன கேசவ பெருமாள் கோவில், மல்லி குட்டை திம்மராய சுவாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில், பாலக்கோடு ரோடு ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில், மணிகட்டியூர் ஆஞ்சநேயர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டிசாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, மிக்கனஅள்ளி,பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மாரண்டஅள்ளி, பொம்மிடி இந்த அனைத்து ஊர்களிலும் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story