நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா ஒருவர் பலி


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
x
தினத்தந்தி 22 Oct 2021 4:30 PM GMT (Updated: 22 Oct 2021 4:30 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
65 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 51,757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே ஒருவரின் பெயர் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,758 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 65 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,823 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 58 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
ஒருவர் பலி
இதனிடையே நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 494 பேர் பலியாகி உள்ள நிலையில், நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 495 ஆக ஆனது. நாமக்கல் மாவட்டத்தில் 50,717 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 611 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story