விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி பூலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 24). விவசாயி. இவரது மனைவி ரம்யாவின் சகோதரி நிலக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரை கோவையில் காய்கறி வியாபாரம் செய்யும் பூலத்தூரை சேர்ந்த சுரேந்திரகுமார் (22) என்பவர் ஒருதலையாக காதலித்தார். மேலும் மாணவியின் செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பினார். இதுகுறித்து மாணவி தனது மாமா மணிமாறனிடம் கூறினார். பூலத்தூரில் கடந்த 15-ந்தேதி ராமர் கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவுக்கு வந்திருந்த சுரேந்திரகுமாரிடம் மணிமாறன் எதற்காக எனது கொழுந்தியாளுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பினாய்? என கேட்டார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுரேந்திரகுமார், அவரது தந்தை முருகன் (45). தாய் விஜயலட்சுமி (38) ஆகியோர் சேர்ந்து மணிமாறனை தாக்கினர். பின்னர் சுரேந்திரகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிமாறனை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்தநிலையில் சுரேந்திரகுமார், முருகன் ஆகியோர் மதுரையில் உள்ள மகிளா கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை தாண்டிக்குடி போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விஜயலட்சுமியையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story