நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,976 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,976 ஆக உயர்வு
x
தினத்தந்தி 25 Oct 2021 4:19 PM GMT (Updated: 25 Oct 2021 4:19 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,976 ஆக உயர்வு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51,976 ஆக உயர்ந்து உள்ளது.
48 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 930 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,928 ஆக குறைந்தது.
இந்த நிலையில் நேற்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 976 ஆக அதிகரித்து உள்ளது.
555 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 69 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 925 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 496 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 555 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story