கடலூர் அருகே கார் மோதி சிறை காவலர் சாவு


கடலூர் அருகே கார் மோதி சிறை காவலர் சாவு
x
தினத்தந்தி 29 Oct 2021 8:43 PM IST (Updated: 29 Oct 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் விசாரணை

நெல்லிக்குப்பம், 

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்த்தவர் ஆரோக்கிய பெக்மான் (வயது 25). இவர் கடலூர் மத்திய சிறைச்சாலையில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கஸ்டம்ஸ் சாலை வழியாக மருதாடு சோதனை சாவடி அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஆரோக்கிய பெக்மான்  சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆரோக்கிய பெக்மான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story