நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழைக்கு மேலும் 6 ஏரிகள் நிரம்பின பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழைக்கு மேலும் 6 ஏரிகள் நிரம்பின பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழைக்கு மேலும் 6 ஏரிகள் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 6 ஏரிகள் நிரம்பின
நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையின் அளவு 716.54 மி.மீட்டர் ஆகும். இந்த ஆண்டில் இதுவரை சுமார் 850 மி.மீட்டர் மழை பொழிந்து உள்ளது. இது சராசரியை விட அதிகம் என்பதால், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் 79 ஏரிகள் உள்ளன.இவை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றில் கடந்த வாரம் வரை மின்னக்கல், சேமூர், அக்கரைப்பட்டி உள்ளிட்ட வரை 22 ஏரிகள் நிரம்பி இருந்தன. இந்த நிலையில் மழை நீடித்து வருவதால், கஸ்தூரிப்பட்டி, பழையபாளயைம், சிவநாயக்கன்பட்டி, செல்லிபாளையம், பாப்பான்குளம், வேட்டாம்பாடி என மேலும் 6 ஏரிகள் நிரம்பி உள்ளன. எனவே இதுவரை நிரம்பி உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
39 ஏரிகளில் தண்ணீர் இல்லை
அக்ரஹாரம், திப்ரமாதேவி, புதுக்குளம் ஆகிய 3 ஏரிகள் 75 சதவீதமும், பவித்திரம், தூசூர், பொன்னார் குளம் ஆகிய 3 ஏரிகள் 50 சதவீதமும், 6 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழும் தண்ணீர் நிரம்பி உள்ளன. இதுதவிர 39 ஏரிகள் தண்ணீரின்றி காணப்படுகின்றன. அவற்றில் சிறு, சிறு கிடங்குகளில் மட்டுமே மழைநீர் தேங்கி நிற்கிறது. அவற்றின் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளே தண்ணீர் நிரம்பாமல் இருப்பதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story